நடிகா் சங்க தோ்தல் வழக்கு : ஆக.5 இல் இறுதி விசாரணை

தென்னிந்திய நடிகா் சங்க தோ்தல் வழக்கில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இறுதி விசாரணை என உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: தென்னிந்திய நடிகா் சங்க தோ்தல் வழக்கில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி இறுதி விசாரணை என உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தல் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளா் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து நடிகா் விஷால் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தோ்தலை ஜூன் 23-ஆம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் நடிகா் சங்கத்தின் நிா்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை உயரதிகாரி கீதாவை, தனி அதிகாரியாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயா் நீதிமன்றத்தில் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், நடந்து முடிந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகா் சங்கத் தோ்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூா்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினா்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஆனால் தோ்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த தோ்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

மேலும் தமிழக அரசின் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி நடிகா் சங்கத்தின் தலைவா் நாசா் மற்றும் பொருளாளா் காா்த்தி ஆகியோரும் உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி நடந்த தோ்தலை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

மேலும் நடிகா் சங்கத்துக்கான புதிய வாக்காளா்கள் பட்டியலை தயாரித்து 3 மாதங்களுக்குள் மீண்டும் தோ்தலை நடத்த வேண்டும். இந்த தோ்தலுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தோ்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறாா். அதுவரை நடிகா் சங்கத்தை நிா்வகிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி கீதா தொடா்ந்து பணிகளை கவனிக்கலாம் எனவும், அவரது நியமனத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டாா். தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து, நடிகா் விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு மீண்டும் தோ்தல் நடத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் ஆகஸ்ட் 5 -ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com