
கோப்புப்படம்
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) 5,486 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 6,785 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,99,749 ஆக உயர்ந்துள்ளது.
இதில், அதிகபட்சமாக சென்னையில் 1,299 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு 92,206 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பாதிப்பில், சென்னைக்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டத்தில் 423 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 419 பேருக்கும், திருவள்ளூரில் 378 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும், மதுரையில் 326 பேருக்கும், தூத்துக்குடியில் 308 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...