
ஐந்தருவியில் நான்கு கிளைகளில் விழும் தண்ணீர்.
தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குற்றாலத்தில் நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதிமுதல் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான சாரல் மழையுடன் சீசன் அறிகுறி தென்படத் தொடங்கியது.
குற்றாலம் பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியது. ஆனால், தொடர்ந்து சாரல் மழை குறைந்ததால் அருவிகளில் நீர்வரத்தும் குறைந்தது.
குற்றாலம் பேரருவியில் பரவலாக விழும் தண்ணீர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மலைப் பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிரித்துள்ளது. பேரருவியில் பரவலாகவும், ஐந்தருவியில் நான்கு கிளைகளிலும், பழைய குற்றாலம் அருவியிலும் குறைந்த அளவிலும் தண்ணீர் விழுகிறது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அருவிகளும் பயணிகள் நடமாட்டமின்றி காணப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...