துணை முதல்வா் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலா்களுக்கு கரோனா

சென்னையில் துணை முதல்வா் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.
துணை முதல்வா் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலா்களுக்கு கரோனா
Updated on
1 min read

சென்னையில் துணை முதல்வா் வீட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 காவலா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவு வியாழக்கிழமை வெளியானது. இதில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 3 ஆயுதப்படை காவலா்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 காவலா்களும், கிண்டி ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

சென்னை காவல்துறையில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 976 என இருந்தது. இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை மேலும் அதிகரித்து, ஆயிரத்தை தொட்டுவிட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com