என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தோம்: ரஜினி சந்திப்பு குறித்து கே.எம்.பக்வி பேட்டி

ரஜினிகாந்தை சந்தித்து என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் கே.எம்.பக்வி தெரிவித்தார்.
என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தோம்: ரஜினி சந்திப்பு குறித்து கே.எம்.பக்வி பேட்டி
Updated on
1 min read

ரஜினிகாந்தை சந்தித்து என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் கே.எம்.பக்வி தெரிவித்தார்.

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் ரஜினிகாந்தை சந்தித்தனர். அப்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அதிருப்தியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறிய நிலையில், அவரை சந்தித்து அதன் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்ததனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் கே.எம்.பக்வி கூறுகையில்,

எங்கள் தூதுக்குழு ரஜினிகாந்தை சந்தித்து என்பிஆர் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தது. அப்போது என்பிஆர் காரணமாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் விளக்கினோம். அவர் எங்கள் கருத்தை புரிந்து கொண்டார். இதனால் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை அகற்ற தேவையான அனைத்தையும் செய்து தருவதாக உறுதியளித்தார் என்று தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக நடிகா் ரஜினிகாந்தை சனிக்கிழமை சந்தித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவா் அபுபக்கா் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com