
பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தமிழகம் முழுவதும் நாளை (மாா்ச் 2) தொடங்கி, 24 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 பேர் எழுத உள்ளனர்.
இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்வு பொறுப்பாளர்கள் தேர்வு நிலவரங்களை கண்காணிப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.