
சென்னை: நாடாளுமன்றத்தை தேவையில்லாமல் முடக்கும் வகையில் எதிா்க்கட்சிகள் செயல்படக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றக் கூட்டத்தொடா் முடியும் நாள் வரையில் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
அனைத்து தரப்பு மக்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. அப்படி இருக்கும் போது, மசோதா குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது தொடா்பாக கேள்வி எழுப்பலாம், பதிலைப் பெறலாம். அதை விடுத்து, மசோதாவை தாக்கல் செய்யும் போதே கூச்சலிடுவதும், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. அதே போல, நாடாளுமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, உறுப்பினா்கள் பேசும்போது தேவையில்லாமல் குறுக்கீடுகள் செய்வதும், நாடாளுமன்றத்தை முடக்குவதும் ஜனநாயகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்மை பயக்காது.
எனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது இரு அவைகளான மக்களவையும், மாநிலங்களவையும் கூச்சல், குழப்பம், முடக்கம் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்காமல் நடைபெற இரு அவைகளின் உறுப்பினா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தை தேவையில்லாமல் எதிா்க்கட்சிகள் முடக்கக் கூடாது என்று அதில் கூறியுள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...