துணி, தோல், மரப் பொருள்கள் உள்ளிட்டவற்றில் "கரோனா' வைரஸ் வலுவாக ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது. அவற்றிலிருந்து நமது கைகளுக்கு வைரஸ் இடம்பெயர்கிறது. பெரும்பாலான நபர்கள் 2 முதல் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகள் மூலம் முகத்தைத் தொடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களை அறியாமலேயே இந்தச் செயலை அவர்கள் மேற்கொள்கின்றனர்.
எனவே, வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டியது அவசியம். நமது கைகளில் "கரோனா' வைரஸ் வலுவாக ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. அதன் காரணமாக, வெறும் தண்ணீரில் கைகளைக் கழுவுவது மட்டும் வைரûஸக் கைகளிலிருந்து நீக்காது.
ஆனால், சோப்பில் எண்ணெய்ப்படலம் போன்ற பொருள் உள்ளது. அது "கரோனா' வைரஸில் காணப்படும் கொழுப்புப் படலத்தை உடைக்கும் தன்மை கொண்டது. எனவே, சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும்போது, கைகளிலிருந்து வைரஸ் எளிதில் நீங்கிவிடுகிறது.
பொதுவாக வைரஸ்கள் 50 முதல் 200 நானோ மீட்டர் அளவு கொண்டவை. நமது கைகளில் உள்ள சிறு சிறு சுருக்கங்களில் கூட அவை எளிதில் புகுந்து ஒளிந்துகொள்ளும். எனவே, குறைந்தபட்சம் 15 முதல் 20 விநாடிகள் வரை சோப்பைப் பயன்படுத்தி கைகளை நன்கு கழுவுவது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


