விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 143 பேர் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 143 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 143 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இன்று முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 143 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com