கரோனா பாதிப்பு: திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும் என்று திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்டாலின்
ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: கரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும் என்று திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக் கவசம், சேனிட்டைசர், சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை திமுக MLAs & MPs செய்ய வேண்டும்.

#CoronaVirus தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும்!  .     

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அவரது வேண்டுகோளின்படி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு செய்த உதவி குறித்த பதிவை ‘ரீட்வீட்’ செய்து அவர் இந்த பதிவை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com