தில்லியில் இருந்து சேலம் திரும்பிய இருவர்: மருத்துவமனையில் வைத்து கண்காணிப்பு

சேலம் மாவட்டம் கெங்கவல்லியிலிருந்து தில்லி சென்று வந்த இருவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
தில்லியில் இருந்து சேலம் திரும்பிய இருவர்: மருத்துவமனையில் வைத்து கண்காணிப்பு


சேலம் மாவட்டம் கெங்கவல்லியிலிருந்து தில்லி சென்று வந்த இருவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி முருகன் கோயில் அருகே வசிக்கும் இப்ராகிம் மகன் முகம்மது அன்வர் (31). அன்வரும் அதே பகுதியில் வசிக்கும் அக்பர் அலி (55) ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த வாரம், ஒரு இஸ்லாமிய அமைப்பு சார்பில் தில்லியில் நடந்த குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்குச் சென்றனர். 

அதில் கரோனா வைரஸ் அதிகம் பாதிப்பிற்குள்ளான இத்தாலியிலிருந்து வந்த மதகுருமார்கள் பங்கேற்றுள்ளனர். அத்தகைய போராட்டத்திற்குச் சென்று விட்டு, ஒரு வார இடைவெளியில் அவர்கள் திங்கள்கிழமை கெங்கவல்லி திரும்பியுள்ளனர். 

இதையடுத்து, தகவலறிந்த கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து தலைமையில், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் உதவியுடன் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com