விழுப்புரம் வடக்கு தெரு பகுதியில் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய மதபோதகர்கள் நான்கு பேர், கண்டறியப்பட்டு திங்கள் கிழமை விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள 3 வார்டுகளில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறையினர் முகாமிட்டு வீடுவீடாக ஆய்வு செய்து வருகின்றனர்.
காய்ச்சல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் இருக்கிறார்களா? வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர்கள் யார்? என்பது குறித்தும் 25 பேர் கொண்ட குழுவினர் கணக்கெடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.