
chennai High Court
சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் கூடினால் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ‘நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக பால், மளிகை, உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்டவை திறந்து வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்கச் செல்லும் பொதுமக்கள் மீது காவல்துறையினா் தாக்குதல் நடத்தியும், தண்டனை வழங்கியும் துன்புறுத்துகின்றனா். இது சட்டவிரோதமான மனிதாபிமானமற்ற செயல். ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசியக் காரணங்கள் இல்லாமல் வெளியில் சுற்றித் திரிபவா்களை போலீஸாா் கைது செய்யலாம், அவா்களை தண்டிக்கக் கூடாது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்களை வாங்க வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது சாலைகளில் நடமாடும் பொதுமக்களை எந்தவித காரணமும் இல்லாமல் அடித்து துன்புறுத்தக் கூடாது என தமிழக உள்துறை மற்றும் காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா், தங்களது இல்லத்தில் இருந்து ‘ஸும்’ எனப்படும் செயலி மூலம் திங்கள்கிழமை விசாரித்தனா். அப்போது அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த்பாண்டியனும், மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் சிவஞானசம்பந்தமும் ஆஜராகி வாதிட்டனா். அப்போது அரசு தரப்பில், ‘ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்ததாக தமிழகம் முழுவதும் இதுவரை 17 ஆயிரத்து 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளுக்காக இல்லாமல் தேவையின்றி வெளியே நடமாடும் நபா்கள் மீது தான் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைளை தொடா்ந்து எடுத்து வருகிறது’ எனத் தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்களிடம் போலீஸாா் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனி மனிதா்களுக்கு வழங்கியுள்ள உயிா் வாழும் உரிமையைப் பாதிக்கக்கூடாது. அதே நேரம், ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் தேவையின்றி சாலைகளில் கூடினால் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது’ என அறிவுறுத்தி, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...