தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கப்பல் விளக்குகளை ஒளிரச் செய்து மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த கடலோரக் காவல்படையினர்

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடலோரக் காவல் படையினர் கப்பல் விளக்குகளை ஒளிரச் செய்யும் நன்றி தெரிவித்த நிகழ்வு காரைக்கால் கடல் பகுதியில் ஞாயிற்றுக்க

News image

கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விளக்குகளை ஒளிரச் செய்து மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த கடலோரக் காவல்படையினர்.

Updated On :4 மே 2020, 6:54 pm


காரைக்கால் : கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடலோரக் காவல் படையினர் கப்பல் விளக்குகளை ஒளிரச் செய்யும் நன்றி தெரிவித்த நிகழ்வு காரைக்கால் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்டது.

கரோனாவுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நடவடிக்கைகளில் முப்படைகளும் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டது. காரைக்காலில் கமாண்டிங் அலுவலகம் அமைத்து, காரைக்கால் துறைமுகத்திலிருந்து ரோந்துக் கப்பல் போக்குவரத்து மேற்கொண்டுள்ள இந்திய கடலோரக் காவல்படையும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வை நடத்தியது.

இதையொட்டி கடலோரக் காவல்படைக்கு சொந்தமான ராணி துர்காவதி என்கிற ரோந்துக் கப்பல், ஞாயிற்றுக்கிழமை இரவு காரைக்கால் கடல் பகுதியில் கரையிலிருந்து 2 நாட்டிக்கல் மைல்  தொலைவில் நிறுத்தப்பட்டு, கப்பலின் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்தது. கப்பலில் இருந்து ஒளிரும் பிஸ்டல் இயக்கப்பட்டது. தொலைவிலிருந்து பார்த்தவர்களுக்கு இது வாண வேடிக்கை போன்று காட்சியளித்தது.

காரைக்கால் கடற்கரையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வகையில் சீல் வைக்கப்பட்டதால், இதனை மக்கள் நேரில் காணமுடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.