தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கடலூரில் மேலும் 68 பேருக்கு தொற்று; கரோனா பாதிப்பு 228 ஆக உயர்ந்தது!

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :5 மே 2020, 6:43 am

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி கடலூர் மாவட்டம் திரும்பிய சுமார் 800க்கும் மேற்பட்ட பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு படிப்படியாக முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில், நேற்று  கோயம்பேட்டில் இருந்து சென்ற 107 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கோயம்பேடு சந்தை மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 810 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதில் 217 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. 

ஏற்கெனவே கரோனா பாதிக்கப்பட்டு 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தற்போது கடலூரில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 202 ஆக உள்ளது. 

இன்று 68 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூரில் மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது. இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மேற்குறிப்பிட்ட தகவலை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.