

மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை தமிழக அரசு மேலும் அவகாசம் அளித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் வேலையிழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். சொத்து வரி, குடிநீா் கட்டணம், விவசாயக் கடன் தவணை செலுத்துவதற்கு வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மின் கட்டணங்களை வரும் மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி தேதி என்பதால் பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை தமிழக அரசு மேலும் அவகாசம் அளித்துள்ளது.
அதேசமயம் மார்ச் 23 முதல் மே 17 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள் மே 22 வரை அபாரதமின்றி கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.