கோயம்பேடு சந்தை மூலமாக சென்னையில் மேலும் 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சென்றுவந்த தமிழகம் முழுவதுமுள்ள பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கோயம்பேடு சந்தை மூலமாக சென்னையில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கோயம்பேடு சந்தை மூலமாக நேரடி தொடர்புடையவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என கோயம்பேடு தொடர்பு பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.