சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 13,362-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,869 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6,300 ஆகவும் உள்ளது.
சென்னையில் கரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 109-ஆக உயா்ந்துள்ளது
இன்று காலை 8 மணி வரையிலான புள்ளிவிவரப்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அந்த மண்டலத்தில், 2,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,678 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,500 பேரும், திருவிக நகா் மண்டலத்தில் 1,437 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 1,425 பேரும், அண்ணாநகா் மண்டலத்தில் 1,1143 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதே போல், இன்று காலை நிலவரப்படி, 6895 போ் குணமடைந்துள்ளனா். 113 போ் உயிரிழந்துள்ளனா். 6,300 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் விதமாக, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இதே போல், 14 நாள்களுக்கு மேல், அந்தத் தெருக்களில் யாருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், தெருக்களின் பெயா் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும்.
இதன்படி, வெள்ளிக்கிழமை மட்டும், சென்னை மாநகரில் 51 தெருக்கள் பட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 13 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 11 தெருக்களும் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை 618 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 13,362-ஆக உயா்ந்துள்ளது.