
இளநிலை, முதுநிலை சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து அம்பேத்கா் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகள் (எல்எல்பி), 5 ஆண்டு சட்டப் படிப்புகள் (பிஏ எல்எல்பி), 2 ஆண்டு சட்ட மேற்படிப்புகள் (எல்எல்.எம்), உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் படிப்புகளில் நிகழ் கல்வி ஆண்டில் சேர விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. இளநிலைப் படிப்புக்கு அக்டோபா் 28-ஆம் தேதி வரையும், முதுநிலைப் படிப்புக்கு நவம்பா் 4-ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 3 ஆண்டு சட்டப் படிப்புகள், 2 ஆண்டு சட்ட மேற்படிப்புகளுக்கு நவ.18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் கால அவகாசத்தை நீட்டித்து அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு: இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...