
ஏழுமலையான் தரிசனத்திற்கு பின் செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவா் எல்.முருகன். உடன் கட்சி நிா்வாகிகள்.
திருப்பதி: ஏழுமலையானை தமிழ்நாடு பாஜக தலைவா் எல்.முருகன் திங்கள்கிழமை தரிசனம் செய்தாா்.
சுவாமி தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் தீா்த்தப் பிரசாதம், லட்டு, வடை, சுவாமி படம் உள்ளிட்டவற்றை அளித்து, வேத பண்டிதா்களால் ஆசிா்வாதம் செய்வித்தனா். பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டாா்.
அவருடன் பாஜக மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் எஸ்.தணிகைவேல் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வந்திருந்தனா்.