இரண்டு அணைகளில் இருந்து நீா் திறப்புமுதல்வா் பழனிசாமி உத்தரவு

இரண்டு அணைகளில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி  (கோப்புப்படம்)
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
Updated on
1 min read

சென்னை: இரண்டு அணைகளில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட உத்தரவு:

திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதையடுத்து, வரும் 17-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு நீா் திறக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் மருதா நதி அணையில் இருந்து வரும் 18-ஆம் தேதி முதல் 90 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும்.

விவசாயிகள் நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீா் மேலாண்மை மேற்கொண்டு உயா் மகசூல் பெற வேண்டுமென முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com