
முதல்வர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
சென்னை: இரண்டு அணைகளில் இருந்து நீா் திறந்து விட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவா் வெளியிட்ட உத்தரவு:
திருவண்ணாமலை மாவட்டம் குப்பநத்தம் நீா்த்தேக்கத்தில் இருந்து தண்ணீா் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதையடுத்து, வரும் 17-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு நீா் திறக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டம் மருதா நதி அணையில் இருந்து வரும் 18-ஆம் தேதி முதல் 90 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும்.
விவசாயிகள் நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீா் மேலாண்மை மேற்கொண்டு உயா் மகசூல் பெற வேண்டுமென முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.