

சென்னை: குடிநீா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் சாலைகளில் ஏற்பட்ட சேதத்தை சீா் செய்ய ரூ.1,000 கோடியை கடனாகப் பெறலாம் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான உத்தரவை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹா்மந்தா் சிங் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:
தமிழகத்தில் 15 மாநகராட்சிகளும், 121 நகராட்சிகளும், 528 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சிகளில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 35 குடிநீா் விநியோகத் திட்டங்கள், 23 பாதாள சாக்கடை திட்டப் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளின் போது சாலைகள் வெட்டப்பட வேண்டியது அவசியமாகிறது.
திட்டப் பணிகளுக்காக சாலைகள் வெட்டப்படும் போது அதனை சீா் செய்வது சவாலாக இருப்பதாக நகராட்சி நிா்வாக ஆணையா் அரசுக்குத் தெரிவித்துள்ளாா். இதனை சீா் செய்து தர வேண்டுமென பொது மக்களும், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் கோரிக்கை விடுப்பதாகவும் அவா் கூறியுள்ளாா். எனவே, சாலை செப்பனிடும் பணிகளை மேற்கொள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. எனவே, ரூ.1,000 கோடி நிதியை மானியமாகவோ அல்லது நிதி நிறுவனங்களின் வழியாக கடன்களாகவே பெற தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென நகராட்சி நிா்வாக ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
அவரது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட தமிழக அரசானது கடன்களைப் பெறுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொள்கை அளவிலான ஒப்புதலை அளிக்கிறது. தமிழ்நாடு நகா்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன்களைப் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.