

திருமலையில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக, வியாழக்கிழமை மாலை அலிபிரி நடைபாதை வழியாக திருமலையை அடைந்த அவா், பாபவிநாசம் செல்லும் வழியில் உள்ள ஜாபாலி ஆஞ்சநேயா் கோயிலில் வழிபட்டாா். இரவு திருமலையில் தங்கிய அவா் வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை தரிசித்தாா்.
தரிசனம் முடித்துத் திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் ஏழுமலையானின் பிரசாதங்கள் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.