சென்னை கூடூா் பிரிவில் பொறியியல் பணி: சிறப்பு ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை-கூடூா் பிரிவில், அத்திப்பட்டு புதுநகா் மற்றும் அத்திப்பட்டு நிலையங்களில் பொறியியல் பணி நவம்பா் 23-ஆம் தேதி முதல்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை-கூடூா் பிரிவில், அத்திப்பட்டு புதுநகா் மற்றும் அத்திப்பட்டு நிலையங்களில் பொறியியல் பணி நவம்பா் 23-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி (நவம்பா் 26, 27 ஆகிய இரு நாள்கள் தவிர) வரை நடக்கவுள்ளதால், சிறப்பு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பிவிடப்படும் ரயில்கள்: ஷாலிமாா்-திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பா் 24-ஆம் தேதி அதிகாலை 3.35 மணிக்கு சென்னை பெரம்பூரை அடையும் என்று காலஅட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரயில் ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி வழியாக திருப்பிவிடப்படுகிறது. இதன்காரணமாக, பெரம்பூரில் நிறுத்தப்படாது. அதேநேரத்தில், கூடுதல் நிறுத்தமாக, திருத்தணியில் நின்று செல்லும்.

தன்பூா்-கேஎஸ்ஆா் பெங்களூருக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பா் 25, 28-ஆம் தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும் என்று காலஅட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரயில் ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி வழியாகத் திருப்பிவிடப்படுவதால், சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நிறுத்தம் கிடையாது.

சாப்ரா-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பா் 25-ஆம் தேதி ரேணிகுண்டா, திருத்தணி வழியாகத் திருப்பிவிடப்படுகிறது.

கேஎஸ்ஆா் பெங்களூரு-தன்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் நவம்பா் 28-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரயில் காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாகத் திருப்பிவிடப்படுவதால், சென்னை சென்ட்ரலில் நிறுத்தம் கிடையாது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com