வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

செல்லிடப்பேசி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவல் ஆய்வாளர்: விடியோ வெளியீடு

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்போது செல்லிடப்பேசி மற்றம் சங்கிலிப் பறிப்புத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

News image

செல்லிடப்பேசி திருடனை துரத்திச் சென்று பிடித்த காவல் ஆய்வாளரை சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.

Updated On :28 நவம்பர் 2020, 6:15 pm IST


சென்னை: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்போது செல்லிடப்பேசி மற்றம் சங்கிலிப் பறிப்புத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தலைக்கவசம் அணிந்து கொண்டு, திருடிய இரு சக்கர வாகனத்தில் வரும் கொள்ளையர்கள், சாலையில் நடந்து செல்வோரிடம் இருந்து செல்லிடப்பேசிகளையும், தங்கச் சங்கிலிகளையும் பறித்துச் செல்கிறார்கள்.

இதில், துப்பு துலங்குவது காவல்துறைக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவது வழக்கம். இந்த நிலையில், சென்னையில், செல்லிடப்பேசி திருடர்களை காவல்துறை ஆய்வாளர் அன்டிலின் ரமேஷ் தனியாளாக இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று போராடி பிடித்துள்ளார்.

இதன்மூலம், செல்லிடப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மேலம் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து 11 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விடியோ, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இதனை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் அகர்வால் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, காவல் ஆய்வாளர் ஆன்டிலின் ரமேஷின் பணியை பாராட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.