சென்னை: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்போது செல்லிடப்பேசி மற்றம் சங்கிலிப் பறிப்புத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
தலைக்கவசம் அணிந்து கொண்டு, திருடிய இரு சக்கர வாகனத்தில் வரும் கொள்ளையர்கள், சாலையில் நடந்து செல்வோரிடம் இருந்து செல்லிடப்பேசிகளையும், தங்கச் சங்கிலிகளையும் பறித்துச் செல்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே.. உயர் நிறுவன அதிகாரிகளின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் வெறும் ரூ.7,400க்கு விற்பனை
இதில், துப்பு துலங்குவது காவல்துறைக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவது வழக்கம். இந்த நிலையில், சென்னையில், செல்லிடப்பேசி திருடர்களை காவல்துறை ஆய்வாளர் அன்டிலின் ரமேஷ் தனியாளாக இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று போராடி பிடித்துள்ளார்.
இதன்மூலம், செல்லிடப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மேலம் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து 11 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விடியோ, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. இதனை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் அகர்வால் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்து, காவல் ஆய்வாளர் ஆன்டிலின் ரமேஷின் பணியை பாராட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


