3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.3) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.3) லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலைஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.3) லேசான மழை பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். இந்தப்பகுதிகளுக்கு செல்லும் மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com