கொடைக்கானலில் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும் இ-பாஸ் எடுத்து கொடைக்கானல் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்து வருகிறது.

சுற்றுலா இடங்களான வெள்ளி நீர் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜாத் தோட்டம், கோக்கர்ஸ் வாக், பாம்பார் அருவி உள்ளிட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்நிலையில் கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது இதனால் மலைச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டதில் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்தனர்.

இதனால் இன்றும் கொடைக்கானலுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்ததால்  மருத்துவ பரிசோதனை நடைபெறவில்லை.

கொடைக்கானலில் மழையில்லாத நிலையிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை தொடர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com