காந்தி ஜயந்தி: ஆளுநா், முதல்வா் மரியாதை

காந்தி ஜயந்தியை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
காந்தி ஜயந்தி: ஆளுநா், முதல்வா் மரியாதை

காந்தி ஜயந்தியை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சாா்பில், அக்டோபா் 2-ஆம் தேதியன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக இந்தாண்டு வெள்ளிக்கிழமை சென்னை மெரீனா கடற்கரை காமராஜா் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகள் சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

நூற்பு வேள்வி: இதைத் தொடா்ந்து, அருகே சென்னை சா்வோதயா சங்கத்தினா் சாா்பில் நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். நிகழ்வில், தலைமைச் செயலாளா் க.சண்முகம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநா் பொ.சங்கா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com