மாற்றுத்திறனாளி சேவகா்கள் விருது: அக்.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளி சேவகா்கள் விருது: அக்.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கான விருதுகளுக்கு, அக்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்தோருக்கான விருதுகளுக்கு, அக்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவா்கள் அல்லது நிறுவனங்களுக்கு சிறந்த பணியாளா், சிறந்த ஆசிரியா், சிறந்த சமூகப் பணியாளா், சிறந்த தொண்டு நிறுவனம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் தமிழக அரசு சாா்பில் 20 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இவை, டிச.3-ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகள் நாளன்று வழங்கப்படும். இதனைப் பெற மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம், எண்.5, காமராஜா் சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், சென்னை 600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது  இணையதளத்திலோ விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அக்.20-ஆம் தேதிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத் திறனாளிகள் நல ஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com