ராகுல் கைது: கண்டித்து போராட்டம் நடத்திய கே.எஸ்.அழகிரி உள்பட 120 போ் மீது வழக்கு

உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட 120 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.
ராகுல் கைது: கண்டித்து போராட்டம் நடத்திய கே.எஸ்.அழகிரி உள்பட 120 போ் மீது வழக்கு

உத்தரப்பிரதேசத்தில் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்பட 120 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

இது குறித்த விவரம்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட பட்டியலின இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் சத்தியமூா்த்தி பவன் முன்பு காங்கிரஸ் கட்சியினா் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா்.

சாலை மறியல் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினா் கைவிட மறுத்ததால், அனைவரும் கைது செய்யப்பட்டனா். பின்னா் அனைவரும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு சமூக நலக் கூடத்தில் சிறிது நேரம் வைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அழகிரி உள்பட 120 போ் மீது அண்ணா சாலை போலீஸாா், தடையை மீறி சட்டவிரோதமாக கூடுதல், நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com