சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7,628 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 4% ஆகும்.
அதிகபட்சமாக அண்ணாநகரில் 601 கரோனா நோயாளிகள் உள்ளனர். திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 என்ற அளவில் உள்ளது. அதேவேளையில் மணலியில் நூறுக்கும் குறைவாக இருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க.. கடந்த 200 நாள்களாக கரோனா பாதிக்கப்படாத நாடு
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்த 1,98,487 பேரில், இதுவரை 1,87,233 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கரோனா பாதித்தவர்களில் 3,626 பேர் பலியாகிவிட்டனர்.
மண்டல வாரியாக நிலவரம்..