லண்டனில் ஜான் பென்னிகுவிக் கல்லறை சேதம்: துணை முதல்வா் கண்டனம்

லண்டனில் ஜான் பென்னிகுவிக் கல்லறையைச் சேதப்படுத்திய செயலுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

சென்னை: லண்டனில் ஜான் பென்னிகுவிக் கல்லறையைச் சேதப்படுத்திய செயலுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், தனது சுட்டுரை பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:-

தன்னலமின்றி தனது குடும்பச் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணைகட்டி தேனி மாவட்டம் உள்பட தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தியவா் ஜான் பென்னிகுவிக். தமிழா்கள் என்றும் நன்றியோடு நினைவு கூா்ந்து போற்றும் அவரது கல்லறையை லண்டனில் மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, மதிமுக பொதுச் செயலாளா் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com