வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சேலம் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில்  7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் சேலம் உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வள்மண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான  மழையும். 

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெயக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

ஏற்காடு, ஏத்தாப்பூர் தலா 9 செ.மீ மழையும், தர்மபுரி 7 செ.மீ மழையும், திருவண்ணாமலை, பாரூர், சூளகிரி, சூலூர், சுராலகோடு தலா 6 செ.மீ மழையும், ஆத்தூர், போச்சம்பள்ளி, பென்னாகரம், சிவலோகம் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com