மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 91.89 அடியாக உயர்ந்தது.
அணைக்கு விநாடிக்கு 10,045 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து விநாடிக்கு 6,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 510 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 3,255 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 3,004 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 755 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 91.89 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 54.83 டிஎம்சியாக உள்ளது.