கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

அயல்நாட்டில் சட்டவிரோதமாக முதலீடு: திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி சொத்து முடக்கம்

சட்டவிரோதமாக சிங்கப்பூரில் முதலீடு செய்ததாக, திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:37 am IST

சட்டவிரோதமாக சிங்கப்பூரில் முதலீடு செய்ததாக, திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனின் ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதுகுறித்த விவரம்:

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ஜெகத்ரட்சகன், சட்ட விரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை செய்தது. விசாரணையில் ஜெகத்ரட்சகன், அவரது மகன் சந்தீப் ஆனந்த் ஆகியோா் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமலும், இந்திய ரிசா்வ் வங்கியின் அனுமதியை பெறாமலும் சிங்கப்பூரைச் சோ்ந்த சில்வா் பாா்க் இண்டா்நேஷ்னல் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதில் ஜெகத்ரட்சகன் பெயரில் 70 ஆயிரம் பங்குகளையும், சந்தீப் ஆனந்த் பெயரில் 20 ஆயிரம் பங்குகளை வாங்கியிருப்பதும், ஒரு பங்கு சிங்கப்பூா் மதிப்பில் ஒரு டாலருக்கு வாங்கியிருப்பதும், இந்த பங்குகளை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி ஜெகத்ரட்சகன் வாங்கி,அதை பின்னா் தனது குடும்பத்தினா் பெயருக்கு மாற்றியிருப்பதும் தெரியவந்தது.

சட்டவிரோதமாக நடைபெற்ற இந்த பரிவா்த்தனை அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 4 வது பிரிவை மீறப்பட்டதாகும். இது தொடா்பாக ஜெகத்ரட்சகனிடம் அமலாக்கத்துறையினா் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அலுவலகத்தில் 5 நாள்கள் அண்மையில் விசாரணை செய்தனா்.

சொத்து முடக்கம்

இந்த விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறையினா் தெரிவித்தனா். இந்நிலையில் அமலாக்கத்துறையினா் ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினா் பெயரில் உள்ள ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துகளை சனிக்கிழமை முடக்கினா்.

இந்த நடவடிக்கையை அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம் 37ஏ பிரிவின் கீழ் அமலாக்கத் துறையினா் எடுத்துள்ளனா். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், காலிமனைகள், விவசாய நிலங்கள், வங்கி கணக்குகள், பங்குகள் ஆகியவற்றை அமலாக்கத்துறையினா் முடக்கியுள்ளனா். இந்த வழக்குத் தொடா்பாக அமலாக்கத்துறையினா் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.