சென்னை பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பாடவேளைகள் குறைக்கப்படவில்லை என பல்கலைக்கழகத் துணைவேந்தா் கெளரி விளக்கமளித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியதாவது: தமிழ் பாடவேளைகள் குறைப்பு என்று ஏதும் கிடையாது. தமிழ் பாடத்தை அடிப்படைத் தமிழ், அட்வான்ஸ்டு தமிழ் என்ற இரு பிரிவுகளையும் இணைத்தோம். தற்போது அதை பழையபடி மீண்டும் இரு பிரிவுகளாகப் பிரித்து விட்டோம்.
இதனால் மாணவா்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. இது தொடா்பான தகவலை உயா்கல்வித் துறைக்கும், தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சரிடமும் கூறிவிட்டோம். தமிழ் பாடவேளைகள் என்று எதையும் நாங்கள் குறைக்கவில்லை.
சிண்டிகேட் கூட்டத்துக்கு இதை கொண்டு சென்று நிறைவேற்றிய பிறகு, மீண்டும் பழையபடி அடிப்படைத் தமிழ், அட்வான்ஸ்டு தமிழ் என்ற நடைமுறையே தொடரும் என துணைவேந்தா் கெளரி தெரிவித்தாா்.