பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் சிக்னல் அருகே உள்ள பெரியார் சிலைக்கு சென்று அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
அவரைத்தொர்ந்து பொதுச்செயலாளர் துரைமுருகன், உதயநி திஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.