‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிருஷ்ணகிரியில் புனித வெள்ளி அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :2 ஏப்ரல் 2021, 3:24 am

DIN



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் கிறிஸ்தவர்களால் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.

ஏப்ரல் 11ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் இயேசுவின் துன்பங்களை நினைவு கூறும் நாளாக அனுசரிக்கப்படும் புனித வெள்ளியானது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும் அவர் அடைந்த துன்பங்களையும் நினைவுகூறும் நாளாகும்.

Story image

இயேசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர்  முந்தைய வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் பங்கேற்ற இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Story image

இயேசு கிறிஸ்துவுக்கு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு, சிலுவையை சுமந்தவாறு கல்வாரிக்கு சென்றதைப் போன்ற நிகழ்வு இங்கு நடைபெற்றது. இயேசு உயிர் நீத்த இந்த தினத்தை புனித வெள்ளியாக அனுசரிக்கப்படும் இந்த நாளில் நடைபெற்ற நிகழ்வில் கிறிஸ்தவர்கள், தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.