திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜன் குடும்பத்துடன் வந்து வாக்குப் பதிவு செய்தார்.
ஆவடி சட்டப்பேரவை தொகுதியில் தற்போதைய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்பொருள் துறை அமைச்சரான க.பாண்டியராஜன் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த நிலையில் ஆவடி ஜே.பி.எஸ்டேட்டில் உள்ள ஜெய்கோபால் கரோடியா மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் வருகை தந்தார். அங்கு அவர் ஆண்கள் பிரிவில் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். அதேபோல், அவரது குடும்பத்தினரும் மகளிர் வரிசையில் நின்று வாக்களித்தார்.
இதேபோல், ஆவடி தொகுதியில் திமுக சார்பில் சா.மு.நாசர் போட்டியிடுகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.