மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் துரைமுருகன் 

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ள நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார் துரைமுருகன் 
மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார் துரைமுருகன் 
Published on
Updated on
1 min read

சென்னை: கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ள நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

வேலூா் மாவட்டம் - காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவா், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

பிறகு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவா் கடந்த வாரம் இறுதியில் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த துரைமுருகனின் உடல்நிலை சீரடைந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com