தமிழ்நாடு
நெல்லையில் நடிகர் விவேக்கிற்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி
திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலியில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருநெல்வேலி: திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருநெல்வேலியில் சனிக்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருநெல்வேலி பொதிகை அறக்கட்டளை சார்பில் அரசு அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்று நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கவிஞர் பேரா தலைமை வகித்தார். இதில், கலை மற்றும் பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் வ.கோபால கிருஷ்ணன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.