மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சென்னிமலையில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

News image
Updated On :27 ஏப்ரல் 2021, 9:47 am


ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பொது மக்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர், கிருமிநாசினி ஆகியவற்றை  வழங்கி வருகின்றனர். 

அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சென்னிமலை வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட வெள்ளோடு, கருக்கங்காட்டு வலசு ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்களை சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் தெற்கு மாவட்டச் செயலாளரும் ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளருமான சு.முத்துச்சாமி வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சென்னிமலை வடக்கு ஒன்றிய துனைசெயலாளர் முருகேசன், சென்னிமலை ஊராட்சிமன்ற தலைவர் காயத்திரி இளங்கோவன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.