இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது குறித்த ஆய்விற்கு வேலூர் சி.எம்.சி.க்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கோவாக்சினுடன் கோவிஷீல்டின் முதல் தவணை மருந்தை கலந்துபோடுவது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இரண்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் ஏற்படும் பயன்கள், விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அயோக்கின் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.