விசிக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

அவிநாசி ரங்காநகர் மெர்ஷி கருணை இல்லத்திற்கு விசிக சார்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
விசிக சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்
Published on
Updated on
1 min read



அவிநாசி: அவிநாசி ரங்காநகர் மெர்ஷி கருணை இல்லத்திற்கு விசிக சார்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

விசிக நிறுவனத் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை ஒட்டி, நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை தொகுதி செயலாளர் ஏ.பி.ஆர்.மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய, செயலாளர்கள் வெங்கடாசலம், மாரிச்சாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல அமைப்பு செயலாளர் வளவன்வாசுதேவன், மாநில துணைச் செயலாளர் துரைவளவன் திருப்பூர் மக்களவை தொகுதி செயலாளர் பழ.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். 

இதையடுத்து, பெருமாநல்லூர், அவிநாசி, பழங்கரை உள்ளிட்ட 15 இடங்களில் கொடியேற்றப்பட்டது. இதில் வணிகர் அணி தொண்டைமான் ராசவளவன், மகளீரனி பட்டுரோஜா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் செந்தில்குமார் ரங்கசாமி, சதீஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com