தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

வஜ்ரமலையை மீட்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

Updated On :21 ஆகஸ்ட் 2021, 8:19 am

DIN

திருவள்ளூர்: அச்சிறுப்பாக்கத்தில் மலைப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றி வஜ்ரமலையை மீட்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் வினோத்கண்ணா தலைமை வகித்தார். இதில் பா.ஜ.கவின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்து முன்னணி நிர்வாகி நடராஜன் சிறப்புரை வழங்கினார். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சிறுப்பாக்கம் மலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவாக அகற்றி வஜ்ரமலையை மீட்கவும், கிறிஸ்துவ ஆக்கிரமப்புகளை அகற்றுதல் மற்றும் மதமாற்றம் செய்வதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சதீஷ், பரிமளா மற்றும் பா.ஜ.க, இந்து முன்னணி, விஸ்வஹிந்த் பரிஷத், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.