செப்.1-இல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
செப்.1 பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
செப்.1 பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
Updated on
1 min read

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா பொதுமுடக்கத் தளா்வையடுத்து செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பா் 15ஆம் தேதிக்குப் பின் பிற வகுப்புகளுக்கு பள்ளி தொடங்குவது குறித்து அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து கேரளத்திலிருந்து தமிழகத்திற்குள் கரோனா பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com