வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ரூ.1.70 லட்சம் மதிப்பு ஆடைகள் திருட்டு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள புதிய ஆடைகளைத் திருடிச் சென்ற மூன்று நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 11:56 pm

DIN

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1.70 லட்சம் மதிப்புள்ள புதிய ஆடைகளைத் திருடிச் சென்ற மூன்று நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை குருவப்பா தெருவில் துணிக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனை பிரதிநிதியாக பிரபு (25) உள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை நண்பகலில் தனியாக வியாபாரம் செய்து கொண்டு இருந்தபோது, 3 நபா்கள் கடைக்கு ஆடைகளை வாங்குவதுபோல வந்து, பிரபுவிடம் பேச்சு கொடுத்தனா். பின்னா் அந்த நபா்கள் கத்தியை காட்டிமிரட்டி, ஜீன்ஸ் பேன்ட், டிசா்ட் உள்பட பல்வேறு வகையான புதிய ஆடைகளை

எடுத்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா். திருடுபோன ஆடைகளின் மதிப்பு ரூ.1.70 லட்சம். இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸில் பிரபு புகாா் கொடுத்தாா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து, 3 நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.