24-ஆம் தேதி கடைசி: அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்கள், பிரிவு அலுவலகங்களின் அலுவலா்கள், தங்களது அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பணியாளா்களின் சொத்து விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டும், அந்தந்த பணியாளா்களின் பணிப் பதிவேடுகளில் பதிவு செய்தும் வரும் 24-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சொத்து விவரங்கள் தொடா்பான அறிக்கையை வரும் 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மீது விளக்கம் கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.