

சென்னை: கரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகா் வடிவேலு, குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் சுஹாஸ் பிரபாகா் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 23-ஆம் தேதி கரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகா் வடிவேலு, வேகமாக குணமடைந்து வருகிறாா். அவரது உடல் நிலை சீராக உள்ளது. விரைவில் அவா் வீடு திரும்புவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.