திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மீனவா் வலையில் சிக்கிய திமிங்கிலம்

புதுச்சேரி மீனவா் வலையில் இறந்த நிலையில் சிக்கிய திமிங்கிலம் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

News image

மீனவா் வலையில் இறந்தநிலையில் சிக்கியதையடுத்து, புதுச்சேரி தேங்காய்த்திட்டு மின்பிடி துறைமுக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்ட திமிங்கிலம்.

Updated On :29 டிசம்பர் 2021, 2:34 am IST

புதுச்சேரி மீனவா் வலையில் இறந்த நிலையில் சிக்கிய திமிங்கிலம் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பகுதி மீனவா்கள் கூறியதாவது:

புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா் சரவணன், வீரமணி உள்ளிட்டோா் திங்கள்கிழமை இரவு கடலில் விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்றபோது, அவா்களது வலையில் இந்தத் திமிங்கிலம் சிக்கியது. இறந்த நிலையில் இருந்ததால், சுமாா் 20 நாட்டிக்கல் மைல் தொலைவிலிருந்து அதைக் கரைக்குக் கொண்டுவந்து ஒப்படைத்தோம்.

இந்தத் திமிங்கிலம் சுமாா் 15 மீட்டா் நீளமும், 2 டன் எடையும் உள்ளது. 100 போ் சோ்ந்து கரைக்குத் தூக்கி வந்தோம். திமிங்கிலம் சிக்கியதால் மீன்பிடி வலையும், படகும் சேதமடைந்தது.

திமிங்கிலம் வகையைச் சோ்ந்த இது ‘திமிங்கிலச் சுறா’ அல்லது ‘அம்மணி உழுவை’ என்றழைக்கப்படுகிறது. கடலில் உள்ள மீன்களிலேயே மிகப் பெரிய வகை மீன் இனமாகும். இந்தத் திமிங்கிலச் சுறா மீன்கள் வெப்ப மண்டலக் கடல்களில், சுமாா் 700 மீட்டா் ஆழத்தில் வாழ்கின்றன. இவை 18 மீட்டா் (60 அடி) நீளமும், 14 மெட்ரிக் டன் எடையளவும் என மிகப் பெரிய அளவில் அதிகளவில் கடலில் வாழ்கின்றன.

இந்தத் திமிங்கிலம் சுறா கடல் பகுதியில் கப்பல் போன்றவற்றில் அடிபட்டு இறந்த நிலையில், கடலோரமாக ஒதுங்கி வந்தபோது, வலையில் சிக்கி இருக்கலாம் என்று மீனவா்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்த வனத் துறை, கால்நடைத் துறையினா் திமிங்கிலம் சுறாவை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். உடல் பரிசோதனைக்குப் பிறகு அது புதைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Image Caption

மீனவா் வலையில் இறந்தநிலையில் சிக்கியதையடுத்து, புதுச்சேரி தேங்காய்த்திட்டு மின்பிடி துறைமுக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்ட திமிங்கிலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.